Posts

Showing posts from August, 2024

மல்லிகைப்பூ

Image
மல்லிகைப்பூ மல்லிகைப்பூக்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளியினால் ஏற்படும் மூச்சடைப்பு, இருமல் போன்ற தொந்தரவுகள் நீங்க மல்லிகைப்பூக்கள் உதவி செய்கின்றன..  மல்லிகை மொட்டுக்களை எடுத்து புண்கள் காயம்பட்ட இடங்கள் கொப்புளங்கள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து பூசினால் உடனே குணமடையும்.

முடவாட்டுக்கால் கிழங்கு உணவாக பயன்படுதும் முறை - guru yogaram babuji

Image
                    முடவாட்டுக்கால் கிழங்கு  உணவாக பயன்படுதும் முறை 1)    இந்த கிழங்கை ஆட்டுக்காலை சூப் வைப்பது போல பொடிப் பொடியாக நறுக்கியோ அல்லது மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து அரைத்தும் சூப்பாக எடுத்துக் கொள்வார்கள் 2)    சில குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே இந்த கிழங்கு கிடைக்கும் என்பதால் மற்ற சமயங்களில் அதன் தோல் சுருங்கி உள்ளிருக்கும் கிழங்கும் சுருங்கிவிடும். அதில் உள்ள நீர்ச்சத்து போய்விடும் என்பதால் இதை பதப்படுத்துவதற்கு மணல்களில் புதைத்து வைப்பார்கள். 3) இப்போது அதன் தோலை சீவி விட்டு காய வைத்து பொடி செய்து    வருட கணக்கு பதப்படுத்திப் பயன்படுத்திக்கொள்ள முடியும். தேவையான பொருள்கள் 1)    முடவாட்டுக்கால் கிழங்கு - சிறு துண்டு (50-100 கிராம்) 2)    சின்ன வெங்காயம் - 10 3)    பூண்டு - 10 பற்கள் 4)    கருவேப்பிலை - சிறிதளவு 5)    தக்காளி - ஒன்று 6)    சீரகம் - ஒரு ஸ்பூன் 7)    மிளகு - ஒரு ஸ்பூன் 8)    பட்டை ...

மூட்டுவலிக்கு நிரந்தர தீர்வு - guru yogaram babuji - tiruvannamalai

Image
  முடவாட்டுகால் ஆட்டுக்கால் கிழங்கு முடவாட்டுகால் ஆட்டுக்கால் கிழங்கு ( Drynaria quercifolia ) என்பது தமிழ்நாட்டு மலைப்பகுதிகளில் கிடைக்கும் ஒரு வகை பெரணித் தாவரத்தின் கிழங்கு ஆகும்.   இக்கிழங்கை கொல்லிமலையில் முடவன் ஆட்டுக்கால், ஆட்டுக்கால் கிழங்கு என்றும் ஏற்காடு சேர்வராயன் மலைப் பகுதியினர் சைவ ஆட்டுக்கால் என்றும் அழைக்கின்றனர். இக்கிழங்குகள் பார்ப்பதற்குக் கம்பளி போர்த்தியதுபோல மெல்லிய இழைகளுடன் ஆட்டுக்கால் போன்றே காணப்படும்.  இந்தக் கிழங்கைக் கொண்டு சூப் செய்யப்படுகிறது. இந்த சூப்பின் சுவை அப்படியே ஆட்டுக்கால் சூப்பின் சுவையை ஒத்த‍தாக இருக்கும். மேலும் இக்கிழங்கு மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகிறது. இதனால் மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், செரிமான உபாதைகள் போன்றவை குணமாகும் என்று கூறப்படுகிறது. இவை இந்தியா, தென்கிழக்கு ஆசியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூ கினி, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் உள்ளன. தமிழகத்தை பொருத்தவரையில் கொல்லிமலை மற்றும் ஏற்காடு ஆகிய இரண்டு இடங்களில் இந்த கிழங்கு அதிக அளவில் கிடைக்கிறது. முடவாட்டுக்கால் கிழங்கு என்று சொன்னாலே அது கொல்ல...